Sri Lanka

ஒரு பண்டைய தொழிலில் விரிசல் ஏற்படுகிறது

பாரம்பரிய மட்பாண்டங்கள் மீண்டும் புத்தெழுச்சி பெற்றுள்ளன. ஆனால், இன்றைய மட்பாண்டக் கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க யாரும் தயாராக இல்லாத நிலையில், அதன் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

Read this story in

Publication Date

Cracks Start to Form in an Ancient Industry

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

மட்பாண்டத் தொழிலாளி முனியசாமி ரவிக்குமார், இடதுபுறம் மற்றும் தொழிலாளி ஆறுமுகம் தருமராசா ஆகியோர் திருநெல்வேலியில் உள்ள அவர்களது பட்டறையில் மண்பாண்டங்களைத் தயாரிக்கின்றனர்.

Publication Date

யாழ்ப்பாணம், இலங்கை – பல ஆண்டுகளாக, மட்பாண்ட சக்கரங்கள் தூசியை சேகரித்த சேகரிக்கும் நிலையில் அமைதியாக கிடக்கின்றன

இந்நாட்களில், முனியசாமி ரவிக்குமாரின் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள சிறிய தொழிற்சாலையில், சுழலும் சக்கரங்களும் – அதில் களிமண்ணை வடிவமைக்கும் கரங்களும் – வேதனையுடன் எதிர்பார்பற்று உள்ளன. புதிதாகத் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பானைகள் வெயிலில் மின்னுகின்றன; ஏனையவைகள், ஏற்கனவே காய வைக்கப்பட்டு, குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான திருநெல்வேலியில் இருந்து இலங்கையின் மற்ற பகுதிகளுக்கும் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட தயாராக உள்ளன.

நாட்டின் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரின் 2009 இன் முடிவில் இருந்து யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய மட்பாண்டத் தொழில் செழித்து வளர்ந்தது. ஆனால் செழிப்பு என்பது ஒரு கலவையான வரம் என்கிறார் முனியசாமி. உள்நாட்டில் ‘குயவர்கள்’ என்று அழைக்கப்படும் மட்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ள போதிலும், அவர்களது பிள்ளைகள் பெரும்பாலும் குடும்ப வணிகத்தைத் தொடர விரும்புவதில்லை. இலங்கைத் தமிழர்களின் சாதி அமைப்பில், தொழில், அந்தஸ்து மற்றும் பரம்பரையை முன்னிறுத்தி, மட்பாண்டங்கள் மற்றும் பிற கைவினைஞர்களின் தொழில்கள் வரலாற்று ரீதியாக குறைந்த சமூக தரத்துடன் தொடர்புடைய ‘கீழ்-சாதி’ தொழில்களாகும்.

‘என்னுடன் இந்த வேலை அழிந்து விடும் என்ற கவலையே எனக்குள்ளது’ என்று முனியசாமி கூறுகிறார்.

50 வயதுடைய முனியசாமி ஆற்றல் மிக்கவர், பல நாட்கள் பழமையான களிமண் தூசினால் ஆன படிந்த ஆடைகளை அணிந்து இயந்திரங்களின் சப்தத்தை துளைத்துச் செல்லும் குரலில் ” ஆரம்ப காலங்களில் என்னிடம் குறைந்தது ஆறு தொழிலாளர்களாவது இருப்பார்கள்,” என்று கூறுகிறார். ” தற்சமயம் ஒருவர் அல்லது இருவரையே தொழிலாளர்களாக வைத்திருக்க முடிகின்றது.”

வேலையாட்கள் இல்லாத நாட்களும் உண்டு, அவ்வேளைகளில், அவரது மனைவி ரவிக்குமார் ரத்தினவள்ளி உதவ முன்வருகிறார்.

expand image
expand slideshow

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

பழனிமுருகையா ராஜேந்திரன் கோயில்களில் பயன்படுத்தப்படும் சிறிய மட்பாண்டங்களுக்கு வண்ணம் பூசுகிறார்.

கேள்வி அதிகமாக உள்ளது, ஏனெனில், அலுமினியம் மற்றும் உலோகத்திற்கு மாறிய பிறகு, களிமண் பாத்திரங்கள் மீண்டும் நாகரீகமாக மாறியுள்ளன, மேலும் அவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படுகின்றன. இருப்பினும், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக பதிவுகளை மறுப்பதைத் தவிர அவருக்கு சில நேரங்களில் வேறு வழியில்லை.

ஒரு தலைமுறைக்கு முன், யாழ்ப்பாணத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மட்பாண்டத் தொழிலில் ஈடுபட்டிருந்ததாக, முனியசாமி ரவிக்குமாரின் சகோதரரும் மண்பாண்டத் தொழிலாளருமான முனியசாமி ஐயாத்துரை கூறுகிறார், ஆனால் தற்போது, உள்ளூர் கைத்தொழில் ஆறுக்கும் குறைவானவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திருநெல்வேலியில் 37 ஆண்டுகளாக மண்பாண்டத் தொழில் செய்து வரும் பழனிமுருகையா ராஜேந்திரம், தனது மகனின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து இத்தொழிலை செய்து வருகிறார். ‘என்னுடைய அப்பா 24 மணித்தியாலமும் கஸ்ரப்படுவதைப் பார்த்து இவ்வேலையை கைவிடுமாறும் கூறினேன். ஆனால் அவர் தொடர்ந்தும் செய்து வருகின்றார்’ என்கிறார் 26 வயதான ராஜேந்திரம் டேவிட். ‘என்னுடைய அப்பாவின் தொழிலை நான் மேற்கொள்ள விரும்பவில்லை. சமூகத்தில் மற்றவர்களைப் போல உயர் நிலையில் வாழ விரும்பினேன்.’ என்றார். இரண்டு வருடங்கள் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்த ராஜேந்திரம் டேவிட் இப்போது காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். ‘என்னுடன் படித்தவர்கள் எல்லோரும் அரசாங்க வேலையில் இருக்கின்றார்கள். நான் மட்டும் இந்தத் தொழிலைச் செய்ய முடியுமா?’

சில குடும்பங்களுக்கு, 1983 இல் வெடித்த உள்நாட்டுப் போரின் போது இத்தொழிலில் உடைவு ஏற்பட்டது. மோதலின் போது பாதைகள் மூடப்பட்டதால் களிமண் மற்றும் பிற மூலப்பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டதாக சங்கானை நகரின் மட்பாண்ட பயிற்றுவிப்பாளர் அரவிந்தன் நிலாந்தினா கூறுகிறார். ‘அத்தகைய ஒரு நிலையில் பலர் இத் தொழிலை கைவிட ஆரம்பித்தார்கள்’

அது கடினமான காலம் என்பதை பழனிமுருகையா ஒப்புக்கொள்கிறார். சில சமயங்களில், உள்ளூர் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணைப் பயன்படுத்தி மட்டுமே மட்பாண்டங்களைச் செய்ய முடியும் – இது எப்போதும் தவிர்க்க முடியாத தரம் தாழ்ந்த தயாரிப்புகளை விளைவித்தது.

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

முனியசாமி ரவிக்குமார் திருநெல்வேலியில் உள்ள தனது பட்டறையில் மண்பாண்ட சக்கரத்தை இயக்குகிறார்.

முனியசாமி, நேர்மாறாக, போரின் போது ஆற்றங்கரை களிமண்ணை எளிதில் அணுகக்கூடிய ஒரு பகுதிக்கு இடம்பெயர்ந்தார் – பலரைப் போலல்லாமல், அவர் குடும்ப வணிகத்தைத் தொடர ஒரு காரணம். ‘உண்மையில், நான் தொழிலைக் கற்றுக்கொண்டேன், அங்கு நான் ஒரு மட்பாண்டத் தொழிலாளியாகப் பணிபுரிந்தேன்“ எனக் கூறுகின்றார்.

வரலாற்று ரீதியாக, மட்பாண்டத் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர் என்று யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் திணைக்களத்தில் மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றும் நேசநாதன் பிரதீபன் கூறுகிறார். அரவிந்தன் கற்பிக்கும் மட்பாண்ட தொழிற்றிறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தை அவர் மேற்கோள் காட்டி, இது 1966 இல் அரசாங்கத்தால் நிறுவப்பட்டு மட்பாண்டத் தொழிலாளர்களுக்கு அரைக்கும் இயந்திரங்கள், பிற இயந்திரங்கள் மற்றும் மட்பாண்டக் கொட்டகைகள் கட்ட நிதியும் வழங்கப்பட்டுள்ளது என்கிறார். மேலும் அவர் கூறுவதாவது, மட்பாண்டத் தொழிலாளர்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த கண்காட்சிகள் மற்றும் சந்தைகள் பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. மேலும், 2020 ஆம் ஆண்டில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் களிமண், பிரம்பு, பித்தளை, தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில்களை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய அமைச்சை உருவாக்கியது.

‘நாங்கள் புதிய மட்பாண்டக் கலைஞர்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். ஆனால், புதிதாக மட்பாண்டத் தொழிலை முன்னெடுப்பதற்கு இளைய சமூகம் ஆர்வம் காண்பிப்பதில்லை’ என்கின்றார் நேசநாதன்.

சங்கானையில் உள்ள இப்பயிற்சி நிலையத்தில் கடந்த எட்டு வருடங்களாக 60 முதல் 70 மாணவர்கள் வரை பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மிகச் சிலரே அந்தப் பயிற்சியின் மூலம் ஒரு தொழிலைத் தொடர்ந்துள்ளனர் என்கிறார் அரவிந்தன். அதற்கான ஒரு காரணம், அரசு வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையாகும் என மட்பாண்டப் பயிற்றுவிப்பாளர் கூறுகிறார்.

மற்றும் மட்பாண்டங்கள் பாரம்பரியமாக ஒரு சமூகம் சார்ந்த தொழிலாக இருந்து வருவதால் – அதாவது சாதியின் அடிப்படையில் – வேறு யாரும் கற்றுக்கொள்ள முன்வருவதில்லை என்கிறார் முனியசாமி ஐயாதுரை. ‘அவ்வாறு ஒரு சிலர் வந்தாலும் அவர்களிடம் இத்தொழிலுக்கான நேர்த்தியும் பொறுமையும் இருக்காது.’ என்று அவர் மேலும் கூறுகிறார்.

விஜயதர்சினி தினேஸ், GPJ இலங்கை

மட்பாண்டங்கள் திருநெல்வேலியில் வெயிலில் காயவைக்கப்பட்டுள்ளன; யாழ்ப்பாணத்தில், விற்பனைக்காகக் காட்சிப்படுத்தபட்டுள்ளன.

நேசநாதனின் கூற்றுப்படி, மட்பாண்டங்கள் மட்டுமே இந்த முறையில் நலிவடைந்து வரும் பாரம்பரிய தொழில் அல்ல. துணி சாயமிடுதல் மற்றும் கள்- வடித்தல் – தென்னை மரங்களின் உச்சியில் இருந்து சாறு சேகரிப்பது – இரண்டும் வரலாற்று ரீதியாக தாழ்த்தப்பட்ட சாதி சார்ந்த தொழில்களாக கருதப்படுகின்றன.

காலை 7 மணியளவில் முனியசாமியின் மட்பாண்டத் தொழிலகத்தில் இருந்து புகை கிளம்புகிறது. செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது: அவரது சிறு தொழில் முனைவகம் ஒவ்வொரு நாளும் 300 முதல் 500 பொருட்களை உற்பத்தி செய்கிறது, மேலும் அவர் சுவிட்சர்லாந்து, கனடா மற்றும் இலண்டன் ஆகிய நாடுகளுக்கு ஒரு வருடத்திற்கு பல முறை சரக்குகளை அனுப்புகிறார். இந்த நாட்களில் அவசரப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது: முடங்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கை நீண்டகால மின் தடைகளால் பாதிக்கப்படுவதால், வேலைக்கான வாய்ப்புகள்வெகுவாகக் குறைந்துள்ளது.

அவரது கொட்டகையிலிருந்து 12 கிலோமீட்டர்கள் (7 மைல்கள்) தொலைவில் உள்ள கந்தரோடையில் பழங்காலத் தமிழர்களின் தலைநகரம் உள்ளது, அங்கு கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தீவில் நாடோடி சமூகங்கள் குடியேறியதால், பொருட்களை சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம். இது 3,000 ஆண்டுகளுக்கு முன்பே நூற்றுக்கணக்கான இடங்களில் மட்பாண்டங்களை பயன்பாட்டிற்கு உருவாக்குவதற்கு வழிவகுத்தது.

முனியசாமி ரவிக்குமாரும் அவருடைய சக மட்பாண்டத் தொழிலாளர்களும் அங்கம் வகிக்கும் பரம்பரை இது. மின்வெட்டு, மண் கொள்முதலில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு சவால்களை அவர்கள் எதிர்கொண்டாலும், அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற யாரும் தயாராக இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் எதுவும் இருத்தலியலாகத் தெரியவில்லை.

இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயதர்சினி தினேஸ் குளோபல் பிரஸ் ஜேர்னலின் நிருபர் ஆவார்.


மொழிபெயர்ப்புக் குறிப்பு

ஜொசப்பின் அந்தனி, ஜி.பி.ஜே, இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார்.

Related Stories